மாண்டஸ் புயல் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

by Editor / 07-12-2022 08:40:33am
மாண்டஸ் புயல் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 8ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக  மீன்வளத்துறை கடந்த 4ம் தேதி  அறிவித்தது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை,செருதூர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்கள்  இன்றும்  கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால்  700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும்  துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via