கல்லால் தாக்கி கொலை முயற்சி 2பேர் கைது

by Staff / 07-12-2022 02:38:21pm
கல்லால் தாக்கி கொலை முயற்சி 2பேர் கைது


தூத்துக்குடி தருவைகுளம், நவமணி நகரை சேர்ந்தவர் தாசன் மகன் அமல்ராஜ் (29). மீனவரான இவருக்கும் தாளமுத்து நகர், ஜே. ஜே. , நகரைச்  சேர்ந்த முருகன் மகன் செண்பகராஜ் (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று டி. சவேரியார்புரத்தில் நடந்த திருவிழாவில் அமல்ராஜ் தனது அண்ணன் அந்தோணி மைக்கேல் என்பவருடன் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அங்குவந்த செண்பகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அமல்ராஜை சரமாரியாக கல்லால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, செண்பகராஜ் மற்றும் ஒரு இளஞ்சிறாரை கைது செய்தார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via