கோர விபத்தில் தம்பதி பலி

by Staff / 08-12-2022 11:47:03am
கோர விபத்தில் தம்பதி பலி

கர்நாடகாவில் அதிவேகமாக சென்ற கார் - லாரி மீது மோதியதில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கலபுர்கியில் பணியை முடித்துவிட்டு சிஐ ரவி உகுந்தாவும், அவரது மனைவி மதுவும் காரில் சிந்தாகி சென்று கொண்டிருந்தனர். ஜேவர்கி தாலுகா நெலோகி என்ற இடத்தில், அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது.

இதில் சிஐ ரவி மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது விஜயபுரா மாவட்டம் சிந்தகி சி.ஐ.,யாக ரவி பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு 10 வயதுக்குள் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதிக வேகம் மற்றும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

 

Tags :

Share via