தேர்வில், பல்கலைக்கழகத்தில் குளறுபடி

by Staff / 13-12-2022 01:26:33pm
 தேர்வில், பல்கலைக்கழகத்தில் குளறுபடி

ஆந்திராவின் நெல்லூரில் உள்ள விக்ரம சிம்மபுரி பல்கலைக்கழகத்தில் 800 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், ஒரு மாணவர் 5,360 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அதே போல் பல மாணவர்கள் சுமார் 2,000 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மதிப்பெண்களை பார்த்த பிற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.பல்கலைக்கழகம் நான்காம் செமஸ்டர் தேர்வுகளை 8 மாதங்களுக்கு முன்பு நடத்தியது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இதில் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கும் மேல் மாணவர்கள் பலரும் 2000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளதால், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்துள்ளனர். இருப்பினும் மதிப்பெண் பட்டியலில் தவறுகள் இருந்தால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவாளர் ராமச்சந்திர ரெட்டி தெரிவித்தார்.

 

Tags :

Share via