வாலிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் - மனைவிக்கு தொடர்பு

by Staff / 23-12-2022 02:30:17pm
வாலிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் - மனைவிக்கு தொடர்பு

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணக்குமார் ( 29) என்பவர் கோவையில் உள்ள கண்ணாடி கடையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருக்கிறார்.நேற்று மதியம் தத்தனேரி பகுதி வைகை வடகரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், காரில் வந்த ஒரு கும்பல் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதஞ நிலைதடுமாறி கீழே விழுந்த சரவணக்குமாரை, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டது.
மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலையில் பட்டப்பகலில் நடந்த இக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அவர்கள் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.கொலையான சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இருவரும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சரவணக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.சரவணக்குமாரை பிரிந்து சென்ற அவரது மனைவி பரத் என்பவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார். இது மனைவி குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த சரவணக்குமாரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.இதுதொடர்பாக அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பரத் மற்றும் வல்லரசு உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via