ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மீனவர்கள்

by Editor / 26-12-2022 09:56:12am
ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மீனவர்கள்

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தெற்காசிய மீனவர் தோழமை தலைவரும், பாட்னா தேசிய சட்டக்கல்லூரி பேராசிரியருமான அருட்பணியாளர் பீட்டர் லடீஸ் தலைமை தாங்கினார்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திண்டுக்கல் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர், தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் முன்னிலை வகித்தார். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.பொருளாளர் லிட்டில் பிளவர் அனைவரையும் வரவேற்று பேசினார். குளச்சல் அரிஸ்டோ என்பவருக்கு சொந்தமான இன்பாண்ட் ஜீசஸ் என்ற விசைப்படகு குழந்தை இயேசுவுக்கு குடிலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான மீனவ ஆண்களும், பெண்களும், குழந்தைகளுடன் விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

 

 

Tags :

Share via