அரசியலுக்கு குட்பை கூறிய முன்னாள் முதல்வர்

by Staff / 05-01-2023 02:08:20pm
அரசியலுக்கு குட்பை கூறிய முன்னாள் முதல்வர்

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகி இருப்பேன். 90 வயதில், 50 வயது நபர் போல் நடிக்க முடியாது. அதனால், மக்களிடம் வருவதையும் குறைத்து விட்டேன்', என்றார். வயது அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். 1999 முதல் 2004 வரை முதலமைச்சராக பதவி வகித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

 

Tags :

Share via