தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்

by Staff / 25-01-2023 02:32:54pm
தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்

சபரிமலையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயை கொண்டு தயாரிக்கப்படும் அரவணை பாயாச பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, FSSAI அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலையில் அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் 14 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணை தொகுப்புகளின் விற்பனையை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், 6,65,159 அரவணை டின்களை தேவசம் போர்டு அப்புறப்படுத்தியது.

 

Tags :

Share via