கடன் வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

by Staff / 26-01-2023 01:02:31pm
கடன் வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதில் இருந்து மீள சர்வதேச நிதி ஆணையத்திடம் கடன் கேட்டுள்ளது. இதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், சர்வதேச நிதி ஆணையம் கடன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை ஏற்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கசப்பு மருந்தை ஏற்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தாம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via