குருவாயூர் கோவிலில் ஆனந்த் அம்பானி தரிசனம்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டிற்கும் நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, வியாழன் அன்று குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கோவிலில் பிரார்த்தனை செய்ய தம்பதியினர் கேரளா சென்றனர். புதிதாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தம்பதிகள் நெருங்கிய நண்பர்களுடன் மதியம் 1:30 மணியளவில் கோயிலை அடைந்தனர். ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தை அடைந்த அவர்கள், பின்னர் வாகனம் மூலம் கோயிலுக்கு சென்றனர். கோவில் நிர்வாகத்தினர் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, தம்பதிகளுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
Tags :