பைக் மீது கார் மோதியதில் புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு

by Staff / 28-01-2023 02:09:52pm
பைக் மீது கார் மோதியதில் புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மேலமூகூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் முருகேசன் (43). திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் மகன் சசிகுமார் (48). இவர்கள் இருவரும் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குளித்தலையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு புகைப்படம் வீடியோ எடுக்க முருகேசன் தனது பைக்கில் பின்னால் சசிகுமாரை அமர வைத்து கொண்டு திருச்சியில் இருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மருதூர் மெயின் ரோட்டில் வந்த போது எதிரே வந்த கார் மோதி உள்ளது. இதில் முருகேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னால் உட்கார்ந்து வந்த சசிகுமாருக்கு பலத்த காயம் அடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய இராஜேந்திரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via