கவிதாவிடம் இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை

by Staff / 21-03-2023 11:44:09am
கவிதாவிடம் இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் எம்.எல்.சி.,யுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையில், கடந்த 11ஆம் தேதி கவிதாவிடம் முதல்முறையாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று 2வது முறையாக கவிதாவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். குறிப்பாக சவுத் குரூப் பரிவர்த்தனைகள் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஹைதராபாத் மற்றும் டெல்லி ஹோட்டல்களில் சந்திப்புகள் நடந்ததாக அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via