கடுமையான பனிப்பொழிவு
தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும்.ஆண்டுதோறும் மார்கழி,தை,மாசி ஆகிய மாதங்களில் பனிபொழிவு பெய்யும் மாதமாகும் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல வடமாவட்டங்களில் கடும் பனிபொழிவு காரணமாக வாகன ஒட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர். கட்டிடங்கள், கோயில் கோபுரங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனிபொழிவு இருந்துவருகிறது.மேலும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
Tags :