கஞ்சா பூ விற்பனை: இருவா் கைது

by Staff / 01-09-2023 04:57:37pm
கஞ்சா பூ விற்பனை: இருவா் கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் கஞ்சா பூ விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தேகத்துக்குரிய வகையில் இருவா் தங்கியுள்ளதாக நீலாங்கரை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.போலீஸாா் அந்த ஹோட்டலுக்கு சென்று இருவரிடமும் விசாரணை செய்தனா். அவா்களிடம் இருந்த பையில் மறைத்து வைத்திருந்த 103 கிராம் கஞ்சா பூவை பறிமுதல் செய்தனா். அவா்கள் இருவரும் நீலாங்கரை மரக்காயா் நகா் 7-ஆவது தெருவைச் சோந்த ஜெகநாதன் (25), மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள நாராயண்பூரை சோந்த ஷாதாஸ் ஆலம் (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 4, 63, 300 ரொக்கம், 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

 

Tags :

Share via