பூட்டிய வீட்டுக்குள் வங்கி அதிகாரி சடலம்

by Staff / 01-09-2023 04:55:02pm
பூட்டிய வீட்டுக்குள் வங்கி அதிகாரி சடலம்

மதுரவாயலில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த வங்கி அதிகாரியின் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.அசாம் மாநிலத்தைச் சோந்தவா் கிஷோா் பிரசாத் தாஸ் (45 ). இவா், சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இதற்காக அவா், ஆலப்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்தாா். கிஷோா் பிரசாத் தாஸ் வீடு, சில நாள்களாக பூட்டியே கிடந்துள்ளது.

இந்நிலையில் அந்த வீட்டில் வியாழக்கிழமை அதிகளவு துா்நாற்றம் வீசியது. உடனே பக்கத்து வீட்டினா், மதுரவாயல் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு கிஷோா் பிரசாத் தாஸ் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, கிஷோா் பிரசாத் தாஸ் எப்படி இறந்தாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags :

Share via