போதைப் பாக்கு விற்பனை: 10 நாள்களில் 62 பேர் கைது

by Staff / 01-09-2023 04:48:43pm
போதைப் பாக்கு விற்பனை: 10 நாள்களில் 62 பேர் கைது

சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக 10 நாள்களில் 62 பேர் கைது செய்யப்பட்டனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக 'புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை'"என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் மேற்கொண்டுள்ளாா்.அதன்படி, அனைத்துக் காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதிமுதல் 29-ஆம் தேதி வரையிலான 10 நாள்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சென்னையில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 157 கிலோ போதைப் பாக்கு, 2 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும், கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

 

Tags :

Share via