அதிகாரத்தின் ஆணவம் - ராகுல் காந்தி விமர்சனம்
உபி அரசின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், வீடு தீ பிடித்து எரிந்ததில் தாய், மகள் பலியான சம்பவம் குறித்து ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். அதிகாரத்தின் ஆணவம் மக்களின் வாழும் உரிமையைப் பறிக்குமேயானால் அதற்கு பெயர்தான் சர்வாதிகாரம். கான்பூரில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த புல்டோசர் கொள்கை அரசின் முகமாக மாறியுள்ளது. இதை எப்போதும் இந்தியா ஏற்காது என கூறியுள்ளார்.
Tags :