3-வது நாளாக அண்ணாமலை பாதயாத்திரை

by Staff / 18-08-2023 01:38:37pm
3-வது நாளாக அண்ணாமலை பாதயாத்திரை

குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை 2-நாள் பாதயாத்திரை மேற்கொண்டார். இன்று 3-வது நாளாக நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை சென்றார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். அண்ணாமலை பாதயாத்திரையில் ஏராளமான பெண்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கையில் கட்சிக்கொடியை ஏந்தியவாறு அண்ணாமலையுடன் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். வழி நெடுகிலும் தொண்டர்கள் அண்ணாமலையை பூக்கள் தூவி வரவேற்றனர். அப்போது குழந்தைகள், பெண்கள், கட்சி நிர்வாகிகள் அண்ணாமலையுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். பார்வதிபுரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் வழியாக வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலையை வந்தடைந்தார். அங்கே தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம். ஆர். காந்தி எம். எல். ஏ. , மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via