ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.18.80 லட்சம் மோசடி.5 பேர் மீது வழக்கு

by Editor / 15-02-2023 10:55:21pm
 ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.18.80 லட்சம் மோசடி.5 பேர் மீது வழக்கு

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.18.80 லட்சம் மோசடி செய்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கைது - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை 

விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராஜ். இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நண்பர்கள் மூலம் பழக்கமான சென்னை பெரும்பாக்கம்  எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹரிகுமார், சக்திவேல், சரவணன் மற்றும் அரிக்குமார் மனைவி ஆகியோர் பாபுராஜியிடம் ரயில்வே துறையில் தெரிந்தவர் அதிகாரியாக உள்ளதால், அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 18 லட்சத்து  80 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு, வேலை வாங்கிக் கொடுக்காமல், கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து, பாபுராஜ் கொடுத்தப் புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை பெரும்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்த ஜெயக்குமார்(35) என்பவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via