கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 25-02-2023 12:37:15pm
கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள காக்காபாளையத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீதாராணி. இவர்களுக்கு விக்னேஷ்வரி என்ற ஒரு மகளும், குணசீலன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக வாசுதேவன் தனியாக வசித்து வந்துள்ளார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்த வாசுதேவன் கடந்த இரண்டு மாதங்களாக நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே மாணிக்கம்பாளையத்தில் உள்ள தனது உறவினரான ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் தங்கி காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்தநிலையில் தனிமையில் இருந்து வந்த வாசுதேவன் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி காலை வெகு நேரமாகியும் வாசுதேவன் வேலைக்கு வராததால் அவருடன் வேலை பார்த்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் என்பவர் அவர் தங்கி இருந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது வாசுதேவன் கயிற்றால் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவர் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் வாசுதேவனின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via