ரவுடியை தாக்கிய 5 பேர் கைது

by Staff / 04-03-2023 02:52:13pm
ரவுடியை தாக்கிய 5 பேர் கைது

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 26). ரவுடியான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் பீர்பாட்டிலால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உலகநாதனை தாக்கியது கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பர்மான் (24), அருண்குமார் (27), நந்தகோபால் (27), தமிழ்செல்வன் (27), ரஞ்சித்குமார் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via