எச்3என்2 வைரஸால் ஒருவர் உயிரிழப்பு
நாட்டில் எச்3என்2 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்று இறந்தார். காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ள 85 வயது முதியவர் ஒருவரை பரிசோதித்ததில் அவருக்கு எச்3என்2 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் இதுவரை 6 பேர் எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கை சுகாதாரத்தை பராமரிப்பது, சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி கழுவவும், நெரிசலான சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்; முகக்கவசத்தை பயன்படுத்துவது முக்கியமாகும்.
Tags :