நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு

by Staff / 11-03-2023 01:11:58pm
நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் விவசாயிகள் விளைபொருட்களை நெடுஞ்சாலையில் கொட்டி சென்றனர். அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பெகுசராய் மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் விளைச்சல் ஆன வேளாண் விளை பொருட்களை வாங்காததால் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சந்தைக்கு சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பயிர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட நிலையில், அவற்றின் மீது வாகனங்கள் ஏறி நாசமாகின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via