ராஜாஜி மருத்துவமனை மருத்துவர், செவிலியர், மருத்துவமனை ஊழியர் உட்பட 4 பேர் பணியிட மாற்றம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை எதிரில் ஒருவர் காலில் பெரிய புண், புரையோடிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, எறும்பு மொய்த்த நிலையில் ரோட்டில் வீசப்பட்டு இருந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ரெட்கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தன் பேரில் விரைந்து வந்த ரெட்கிராஸ் அமைப்பினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு கால் அழுகிய நிலையில் இருந்த நபரை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் வீல் சேரில் அவரை தூக்கி வந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு எதிரே உள்ள சாலையில் ஓரமாக தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் சண்முக தள வலைதளங்களில் வைரலாகியது.
அடுத்து இப்ப பிரச்சனை குறித்து விசாரணை செய்த மருத்துவமனை டீன் ரத்தினவேல் கால் அழகிய நிலையில் நோயாளியை வெளியே தூக்கி போட்ட விவகாரத்தில் மருத்துவமனை 219 வார்டில் அன்று பணிபுரிந்த அறுவை சிகிச்சை துறை மருத்துவ மாணவர் 2 பேர் மற்றும் மருத்துவமனை ஊழியர் ரவிச்சந்திரன் செவிலியர் சுதா, உட்பட நான்கு பேரை பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
Tags :