ஸ்பா பெயரில் பாலியல் தொழில் செய்த பெண் கைது-2 பெண்கள் மீட்பு.  

by Editor / 20-03-2023 07:16:34am
 ஸ்பா பெயரில் பாலியல் தொழில் செய்த பெண் கைது-2 பெண்கள் மீட்பு.  

சென்னை விருகம்பாக்கத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளம்பெண்களிடம் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருமானம் பார்க்கின்றனர் என ரகசிய தகவலின் பேரில் போலீசார்  விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர் . இந்த சோதனையில்  முறையான அனுமதி- பெறாமல் சட்டவிரோதமாக ஸ்பா நடத்தி வந்தது தெரியவந்தது. ,மேலும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வாட்ஸ் அப் குழு மூலம்  இளம்பண்களின் புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொழில் நடத்தி வந்ததைத் . தொடர்ந்து . ஸ்பா உரிமையாளர் சாரதாவை (வயது-39) கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட  2 பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via