கொரோனா உறுதியானால் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல்.

by Staff / 05-04-2023 04:45:33pm
கொரோனா உறுதியானால் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் கட்டாய மணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தனிமனித இடைவேளியை கடைபிடித்து கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via