ஆற்றுப்பாலத்தின் அடியில் ஆண் சடலம்

by Staff / 05-04-2023 04:49:26pm
ஆற்றுப்பாலத்தின் அடியில் ஆண் சடலம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குழித்துறை ஆற்று பாலத்தின் அடிப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று காணப்பட்டது. இதனை அடுத்து குளிக்க சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via