கஞ்சா விற்ற வாலிபர் கைது; 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்

by Staff / 12-04-2023 01:34:25pm
கஞ்சா விற்ற வாலிபர் கைது; 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்  தலைமையில் உதவி ஆய்வாளர்  ராமலிங்கம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்  மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர்  திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.இதில், அவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (29) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via