பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு
ஏமன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. ஏமன் தலைநகரில் தொண்டு விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாட்டைத் தாக்கும் இந்த சோகம், புனித ரமலான் மாதத்தின் முடிவான இஸ்லாமிய பெருநாள் விடுமுறைக்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொண்டு பொருட்கள் விநியோகத்திற்கு பொறுப்பானவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :