சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த உளவியலாளருக்கு 7 ஆண்டு சிறை

by Staff / 27-04-2023 01:43:19pm
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த உளவியலாளருக்கு 7 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: மருத்துவ உளவியலாளர் கே. கிரிஷுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது. திருவனந்தபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2015 முதல் 2017 வரை கவுன்சிலிங் என்ற போர்வையில் சிறுவனை கிரீஷ் சித்ரவதை செய்துள்ளார். மணக்காடு குரியாத்தியில் அவரது வீட்டை ஓட்டியுள்ள தனியார் கிளினிக்கில் இந்த சித்திரவதை நடந்துள்ளது. இவர் சிறுவனிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்துள்ளார். இதற்குப் பிறகு, சிறுவனின் மனநிலை மிகவும் மோசமானது. இதனை தொடர்ந்து வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உண்மை தெரியவந்தது.
 

 

Tags :

Share via