அதிமுக போலி பொதுக்குழு கலைப்பு.. ஓபிஎஸ் அதிரடி

by Staff / 01-05-2023 04:31:19pm
அதிமுக போலி பொதுக்குழு கலைப்பு.. ஓபிஎஸ் அதிரடி

அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக கடுமையான விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், கழகத்தின் விதிகளுக்கு நேர்விரோதமாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள பொதுக்குழுவை கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய பொதுக்குழுவை தேர்வு செய்யும் வரை உண்மையான உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதன் பிறகு முறையான, நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via