தமிழ்நாடு அமைதிப்பூங்காவா- ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

by Staff / 04-05-2023 12:35:14pm
தமிழ்நாடு அமைதிப்பூங்காவா- ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த அவர், "காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் வெடிப்பு, வி.ஏ.ஓ படுகொலை போன்றவை நடக்கும் போது, தமிழ்நாடு எப்படி அமைதிப்பூங்காவாகும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via