மாணவியை பலாத்காரம் செய்த போலீசார்

by Staff / 05-05-2023 03:59:37pm
 மாணவியை பலாத்காரம் செய்த போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே பனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர், 17 வயதுள்ள நர்சிங் படிக்கும் மாணவியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதைப்பற்றி வெளியே சொன்னால் குடும்பத்தில் உள்ளவர்களை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சுதாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via