இபிஎஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

by Staff / 07-05-2023 12:32:06pm
இபிஎஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரத்தை குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via