தமிழ்நாடு அரசுடன் ஹுண்டாய் நிறுவனம் ஒப்பந்தம்

by Staff / 11-05-2023 03:43:43pm
தமிழ்நாடு அரசுடன் ஹுண்டாய் நிறுவனம் ஒப்பந்தம்

ஹுண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் நிலையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டில் பணிகளை தொடங்குவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் தொழில்துறையின் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஹுண்டாய் நிறுவன அதிகாரிகள், தமிழ்நாடு அரசு துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via