பெண் தர மறுத்த பெற்றோர் மீது துப்பாக்கிச்சூடு
விழுப்புரம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (40). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையம்மாள்(32). இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதியினர் தாயை இழந்த பாரதி (23), என்ற இளைஞரை சிறு வயது முதலே வளர்த்து வந்தனர். இதனிடையே கோவிந்தனின் மூத்த மகள் மீது பாரதிக்கு காதல் ஏற்பட்டு நேற்று முன்தினம் கோவிந்தனிடம் பாரதி பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுத்ததால் பாரதி நேற்று முன்தினம் மாலை கோவிந்தனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். காப்புப்காடு பகுதியில் பதுங்கியிருந்த பாரதியை போலீசார் கைது சென்றனர்.
Tags :