தாய், மகன் மீது கொடூர தாக்குதல்
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் தாய் மற்றும் மகன் மீது பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திப்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாவா கிராமத்தில் ஒரு பெண்ணும் அவரது மகனும் அண்டை வீட்டாரால் தாக்கப்பட்டனர். கண்மூடித்தனமாக கட்டைகளால் தாக்கப்பட்டதில் பெண் பலத்த காயமடைந்தார். நிலத்தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடுத்தெருவில் வைத்து தாயும், மகனும் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Tags :