மணிப்பூர் கலவர வழக்கில் நீதி விசாரணை
மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களின் உண்மைகளை ஆராய நீதி விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவும் நடவடிக்கை எடுக்கும். பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களை திருடியவர்கள் உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். பழங்குடியினர் குழுக்கள் பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
Tags :