போதை தரும் வலி நிவாரணி மாத்திரை விற்ற 5 பேர் கைது.

by Staff / 01-06-2023 05:14:24pm
போதை தரும் வலி நிவாரணி மாத்திரை விற்ற 5 பேர் கைது.

திருவொற்றியூர், மணலி உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், நேற்று காலை, மணலி பேருந்து நிலையம் அருகே, கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான இருவரை விசாரித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில், போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அவர்களை கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், மேலும், மூவரை கைது செய்த போலீசார், 2, 500 எண்ணிக்கையிலான வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். நந்தனத்தைச் சேர்ந்த கென்ராய், 28, சேத்துப்பட்டைச் சேர்ந்த பசந்த், 27, மாதவரத்தைச் சேர்ந்த பிராஜ் லிம்பு, 30, அத்திப்பட்டைச் சேர்ந்த சூசைல் தாபா, 20 மற்றும் மருந்தக உரிமையாளரான வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்புராயன், 50, ஆகிய 5 பேரையும் விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via