மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

by Staff / 01-06-2023 05:26:48pm
மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

எந்த  ரூபத்திலும் எந்த பேச்சுவார்த்தையிலும் எந்த  சமரசத்திலும் மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில்  .கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் தற்போது தான் பதவிக்கு வந்துள்ளார்.காவேரி பிரச்சனை முழுவதும் அவர் அறிந்திருக்க நியாயம் இல்லைமேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும்.இதனால் எந்த ரூபத்திலும் எந்த எந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சமரசத்திலும் மேகதாது அணை  கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.மேகதாது அணை கட்டுவது என்ற பேச்சு காவேரி நடுவர் மன்றத்தில் வரவில்லை.காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் இந்த பேச்சு வரவில்லை இடையில் சில பேர் ல பேர் இதை தூக்கி வைத்துக் கொண்டுள்ளனர்.இதைத்தான் நண்பர் சிவகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் எனக் கூறினார்.

 

Tags :

Share via