கிணற்றில் இளைஞரின் சடலம்

by Staff / 01-06-2023 05:33:15pm
கிணற்றில் இளைஞரின் சடலம்

அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இளைஞரின் சடலம் மீட்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி ஊராட்சி சூரப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பொம்மு ராஜ் என்பவரது வீட்டுக்கு மே 28ஆம் தேதி திருவிழாவுக்காக வருகை தந்த ராமசாமி நாயக்கர் மகன் விஜய் வயது 23, இவர் அருகாமையில் உள்ள கிணற்று அருகே நின்று கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது தாத்தா வீட்டில் தங்கி காரைக்குடியில் நிதி நிறுவனம் ஒன்றே நடத்தி வந்ததும், நேற்று இரவு முதல் வீட்டில் இருந்தவரை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டு அருகே உள்ள வடிவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் சடலமாக மிதப்பதாக அரவக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பிரேதத்தை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via