ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி

by Staff / 03-06-2023 04:12:37pm
 ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் இரண்டு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். 200 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக்கொண்டார். விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமி குழிக்குள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது உள்ளூர் அதிகாரிகள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜாம்நகர் நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தமாச்சன் கிராமத்தில் உள்ள வயலில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்துள்ளார். சிறுமியை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்

 

Tags :

Share via