பெண் குழந்தையை கொன்ற தந்தை

by Staff / 03-06-2023 04:10:29pm
 பெண் குழந்தையை கொன்ற தந்தை

உத்திர பிரதேச மாநிலத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ஆத்திரத்தில் தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஃபர்ஹான், ஷபோபேகம் தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது. ஆண்குழந்தை வேண்டுமென மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த முகமது ஃபர்ஹான் கோவத்தில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை தரையில் வீசி கொன்றார். இதனை தொடர்ந்து மனைவி கணவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

 

Tags :

Share via