மயக்க மருந்து கொடுத்து நர்சிங் மாணவியை பலாத்காரம். வாலிபர் கைது

by Staff / 08-07-2023 02:16:37pm
மயக்க மருந்து கொடுத்து நர்சிங் மாணவியை பலாத்காரம். வாலிபர் கைது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், நாகர்கோவிலில் ஒரு விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார். நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(25). குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, படகு கட்டும் கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் நர்சிங் மாணவியும் உறவினர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி சிவகுமார், தனது சகோதரியின் குழந்தைக்கு பிறந்தநாள் என கூறி, நர்சிங் மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிவகுமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக நர்சிங் மாணவியை சமாதானம் செய்துள்ளார். ஆனால் அவர்களது திருமணத்துக்கு சிவகுமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் நர்சிங் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவகுமார், அவரது தந்தை பால்ராஜ்(55) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீசார், சீவலப்பேரி சென்று சிவகுமார், அவரது தந்தை பால்ராஜ் ஆகியோரை கைது செய்து குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

Tags :

Share via