மாநாட்டிற்கு ஈபிஎஸ் கொண்டு வந்த ரகசிய பைல்
மதுரையில் அதிமுக சார்பில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து கட்சி லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் வந்து மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் ஈபிஎஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்க்காக, அவர் ரகசிய பைல் ஒன்றை கொண்டு வந்துள்ளாராம். அந்த பைலில் உள்ள தகவல்கள் அனைத்துமே ஈபிஎஸ் கைப்பட எழுதியுள்ளதாக அறிவிப்புகள், தீர்மானங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :