எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்

by Staff / 15-07-2023 11:36:47am
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மிர்புரா கிராமம் அருகே வந்த பாகிஸ்தானியரை பிஎஸ்எப் வீரர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் அந்த நபர் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மை காலங்களாக பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் போதைபொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில், வீரர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

 

Tags :

Share via