புளியங்குடியில் 11ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை.

by Editor / 20-07-2023 10:18:12am
புளியங்குடியில் 11ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை.


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள  புளியங்குடி பிச்சாண்டி தெருவை சேர்ந்த கருப்பசாமி  மகள் முனீஸ்வரி. (16) கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மாரியம்மாள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு  படித்து வந்தார்.பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய முனீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த புளியங்குடி காவல் துறையினர் முனீஸ்வரி உடலை மீட்டு  உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த முனீஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக பரவலாக பேசப்பட்டதால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.மேலும் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக பாதிக்கபட்ட குடும்பத்தினர் சம்பந்தபட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபபரப்பு உருவானது.இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.இறந்தமாணவியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடற்கூறு பரிசோதனை செய்தனர்.பின்னர் மாணவியின் உடல் அடக்கம் நடைபெற்றது.தொடர்ந்து காவல்துறையினர் மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

Tags :

Share via