திருவிழாக்களை முன்னிட்டு பூக்கள்  விலை அதிகரிப்பு. 

by Editor / 01-08-2023 04:16:21pm
 திருவிழாக்களை முன்னிட்டு பூக்கள்  விலை அதிகரிப்பு. 

தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஓட்டப்பிடாரம் குலசேகர நல்லூர் பேரூரணி உள்ளிட்ட கிராமப் பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமங்களில் கோவில் திருவிழா நடப்பதால் தூத்துக்குடி  பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து குறைவாக காணப்படுகிறது. மேலும் தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற  பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.மல்லிகை பூ இன்று கிலோ 600 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோன்று பிச்சிப்பூ கிலோ 700 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் மாலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாளை மறுநாள் ஆடி பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via