திமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை-டாக்டர்.கிருஷ்ணசாமி

by Editor / 02-08-2023 04:44:51pm
திமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை-டாக்டர்.கிருஷ்ணசாமி

திமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொருளாதார சிக்கலில் சிக்கி விரைவில்  திமுக தானாகவே கவிலும் சூழல் உருவாகி உள்ளதாக  தென்காசியில் புதிய தமிழக கட்சியின் கிருஷ்ணசாமி காட்டம்

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் நிர்வாக பணிகளுக்கு ஏற்ற வகையில் தென்காசியை மூன்று பகுதிகளாக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி நியமித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
மது இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் அதற்கான தூதுவராக ரஜினியை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினர். தொடர்ந்து பேசிய அவர்,
திமுக அனைத்து திட்டங்களையும் அறிவித்துவிட்டு தற்போது எதற்கெடுத்தாலும் இல்லை இல்லை கூறிக் கொண்டு வருகிறது.  அதிமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிய கடனை விட இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அதிகமான கடனை வாங்கி உள்ளது. அந்த வகையில் பெரிய பொருளாதார சிக்கலில் தவித்து திமுக ஆட்சி தானாகவே கவிழும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via