மகள் கண் முன் தாய் பரிதாப பலி

by Staff / 05-08-2023 01:55:27pm
மகள் கண் முன் தாய் பரிதாப பலி

ஆவடி அடுத்த சேக்காட்டைச் சேர்ந்த ரவி மனைவி வரலட்சுமி, 46, மகள் குணாளினி, 20. போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், தாய், மகள் பணிபுரிந்து வந்தனர். நேற்று காலை, 'எலக்ரிக் ஸ்கூட்டர்' வாகனத்தில் இருவரும் போரூர் சென்று கொண்டிருந்தனர். காட்டுப்பாக்கம் அருகே, முன் சென்ற குப்பை லாரியை கடக்க முயன்று, லாரியின் மீது வாகனம் மோதியதில், தடுமாறி விழுந்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த வரலட்சுமி, மகள் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்; குணாளினி காயமடைந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வரலட்சுமி உடலை மீட்டனர்.

 

Tags :

Share via